குழந்தைகள் காப்பகம் அமைப்பதற்கான பொது ஒதுக்கீட்டு இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு மாநகராட்சி அதிரடி

கோவை மேற்கு மண்டலம், 18வது வார்டில், வடவள்ளியில் இருந்து தொண்டாமுத்துார் செல்லும் ரோட்டில், வீரகேரளம் கிராமம் பாரதி நகரில், குழந்தைகள் காப்பகத்துக்கு ஏழு சென்ட், பூங்கா அமைக்க, 40 சென்ட் என 'ரிசர்வ் சைட்' ஒதுக்கப்பட்டு இருந்தது. பூங்கா அமைக்க வேண்டிய இடத்தில், கோவில் மற்றும் ஒரு வீடு கட்டப்பட்டு உள்ளது. பூங்கா இடம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது.



குழந்தைகள் காப்பகத்துக்கான இந்த இடத்தை வீரசிவானந்தம் என்பவர் ஆக்கிரமித்து, நான்கு ஆண்டுகளாக, மீன் மார்க்கெட் நடத்தி வந்தார். அதை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சியால் நோட்டீஸ் தரப்பட்டது. அப்போதும் அகற்றாததால், அந்த மீன் மார்க்கெட் கட்டடத்தை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு தற்போது அந்த ஆக்கிரமிப்பு இடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த இடத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.



அதேபோல், இதற்கு அருகிலுள்ள கண்ணப்பன் நகரிலும், பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 50 சென்ட் ரிசர்வ் சைட்டும், 30 அடி ரோடும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் கம்பி வேலி அமைக்கபட்டு 50 சென்ட் நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பலருக்கு விற்கப்பட்டுள்ளது. 



எனவே, நகரமைப்பு பிரிவினர் 'சர்வே' செய்து, மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அப்பகுதியில் பூங்கா இடத்தை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...