காவிரி அணை மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது, நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் ஏமாற்றப்பட்டது ஆகிய விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் கோவை புறநகர் மவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்தும், நீட் தேர்வில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டது. 

பின்னர் பேசிய, திராவிடர் கழக நிர்வாகிகள் காவிரி விவகாரம், நீட் விவகாரம் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மாநில அளவில் நடைபெறுவதாக தெரிவித்தனர். கர்நாடகத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக வழகறிஞர்கள் ஒப்புதல் கொடுததும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். 

மேலும், நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் அதிகமாகவும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் குறைவாகவும் சேர்ந்து இருப்பதாகவும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தங்களுக்கான மருத்துவப்டிப்பிற்கான வாய்ப்புகளை இழந்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...