ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து



கோவை, ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே தனியார் சொகுசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தென்காசியிலிருந்து கோவை வந்த தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை, கோவை ஈச்சனாரி நெடுஞ்சாலை கற்பகம் கல்லூரி அருகே வரும் போது, கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கோவை கருமத்தம்ப்பட்டி நோக்கி வந்த லாரி ஒன்று சொகுசு பேருந்தின் பின் புறத்தில் மோதியதாக தெரிகிறது. 

இந்த விபத்தில், சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஒரு சில பயணிகள் வெளியே வந்த நிலையில், பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் உட்பட குருவம்மா, பெரியசாமி, வத்சலா, சசிதரன், பாலகுரு, பொன்னுச்சாமி ஆகியோர் விபத்தில் சிக்கிக் கொண்டனர். 



இதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லின் இயந்திரத்தின் உதவியோடு பேருந்தை மீட்டு, உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். விபத்தில் பலத்த காயமடந்த ஓட்டுநர் மாரியப்பன், பெண் பயணி குருவம்மா மற்றும் லாரி ஓட்டுநர் அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



விபத்து குறித்து மதுக்கரை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாலம் கட்டாததால் தான் அதிகளவு விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...