முன்னாள் விஞ்ஞானி பெயர் சூடப்பட்ட "புதிய தவளை" இனம்


மேற்கு தொடர்ச்சி மலைகளின் கிழக்குச் சரிவில் புதிய ஊதா தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவளைக்கு சலீம் அலி ஆர்னிதாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய எஸ்.பூபதி என்னும் விஞ்ஞானியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பூபதி, அகஸ்திய மலையில் இதுகுறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



தவளை மற்றும் ஆம்ஃபிபியன்ஸ் பிரிவு குறித்தான பத்திரிகையில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஊதா வகை தவளை இனத்தை கண்டறிந்தவர் ஜனனி என்றும், அதனை ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு நீர்நிலையில் கண்டறிந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.



பூபதி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை தவளை அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றும், மேலும், இந்த தவளை இனத்தின் தங்கையாக என்.சாஹயாட்ரென்சிஸ் வகை உள்ளதையும் கண்டறிந்துள்ளனர். இந்த இரு தவளை இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை உடலளவிலும், வடிவமைப்பினைக் கொண்டும் அடையாளம் காணப்படுகிறது. அறிதாக காணப்பட்டுள்ள இந்த தவளை இனத்தினை அதிகரிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு ஈரப்பதம் நிறைந்த நீர்நிலை அருகில் விடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தவளை எந்தெந்த பகுதியில் உள்ளனவென்றும், எவ்வளவு எண்ணிக்கையில் இது உள்ளது என்றும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களிலேயே இது குறித்தான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது.

என்.பூபதி என்னும் இந்த தவளை இனத்தை நீர்நிலைகள் நிறைந்த வனப்பகுதிகளிலேயே கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏனெனில், இத்தவளை வனப்பகுதியினை விட்டு பொதுமக்கள், மலைத்தொடர்களில் உள்ள கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதையில் குறிக்கிடும் போது இதற்கு இடர்பாடுகள் ஏற்படும் என கருதப்படுகிறது.



மேலும், பக்தர்கள், பொதுமக்கள் மூலம் சமீபகாலமாக நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட நீர்நிலைகளின் அருகிலேயே இதனை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என இதுகுறித்து வெளியான பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...