குழந்தைகள் மீது நடைபெறும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காஷ்மிரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கோவை இளைஞர் தற்போது கன்னியாகுமரி வந்தடைந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த தண்டபாணி லோகநாதன் சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சைக்கிளிங் பிரியரான இவர் ஈரோடு, சேலம், உதகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கேரள மாநிலம் வரை பல்வேறு சமூக விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கினார்.
ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீரில் தண்டபாணி லோகநாதன் துவங்கிய இந்த பயணம் ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, தில்லி, உத்திரபிரதேஷ், மத்தியபிரேதேஷ் உள்ளிட்ட 13 மாநிலங்களின் வழியாக ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணமடைந்து ஆகஸ்ட் 24ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தார்.
இவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பொது ஆய்வாளர் உள்ளிட்டோர் வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.


கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த தண்டபாணி லோகநாதன் சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சைக்கிளிங் பிரியரான இவர் ஈரோடு, சேலம், உதகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் கேரள மாநிலம் வரை பல்வேறு சமூக விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும், தூய்மை இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கினார்.
ஆகஸ்ட் 15 அன்று காஷ்மீரில் தண்டபாணி லோகநாதன் துவங்கிய இந்த பயணம் ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, தில்லி, உத்திரபிரதேஷ், மத்தியபிரேதேஷ் உள்ளிட்ட 13 மாநிலங்களின் வழியாக ஆறாயிரம் கிலோ மீட்டர் பயணமடைந்து ஆகஸ்ட் 24ம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தடைந்தார்.
இவருக்கு, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை பொது ஆய்வாளர் உள்ளிட்டோர் வரவேற்பளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
