2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு மூப்பினை மீளப் பெறவும், அதன் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றிட உதவிடும் வகையிலும் 2017- 2018 ஆம் ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை அரசாணை எண் 500 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை நாள் 2.8.2017 மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் ஆன்லைக் வாயிலாக தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ அல்லது பதிவஞ்சல் மூலமோ தங்களின் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இச்சலுகையானது 21.11.2017 வரை மட்டுமே வழங்கப்படும். இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
எனவே, மனுதாரர்கள் இச்சலுகையை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இச்சிறப்பு புதுப்பித்தல் சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் ஆன்லைக் வாயிலாக தங்களது பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்தோ அல்லது பதிவஞ்சல் மூலமோ தங்களின் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம்.
இச்சலுகையானது 21.11.2017 வரை மட்டுமே வழங்கப்படும். இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
எனவே, மனுதாரர்கள் இச்சலுகையை பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.