வேலை வாங்கித் தருவதாக மோசடி- காவல் ஆணையரிடம் மாணவர்கள் புகார்

வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், ராம்நகர் பகுதியில் இயங்கிவரும் ஜெனிக் கம்யூனிகேசன் என்னும் தனியார் நிறுவனம் படித்த மாணவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, நீண்டகாலமாகியும் வேலை வாங்கித் தராமல் நிறுவனம் இழுத்தடித்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேட்டதற்கு, பயிற்சிக்கு மட்டுமே தொகை வசூலிக்கப்பட்டதாகவும், வேலைஅளிக்கும் நிறுவனங்களில் தாங்களாகவே வேலை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் அலட்சியமாக ஜெனிக் கம்யூனிகேசன் நிர்வாகத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில், ஜெனிக் கம்யூனிகேசன் நிறுவனத்தினர் வேலை வாங்கித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்தனர். ஆனால் தற்போது வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வருகின்றனர். இதுகுறித்து உரிமையாளரிடம் முறையிட்டதற்காக, நாங்கள் இணைந்து உரிமையாளரை கொலை செய்ய முயற்சிப்பதாக அவரது வழக்கறிஞர் எங்களை மிரட்டி வருகிறார்.

எனவே, தங்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கரும்புக்கடை, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்த அக்பர் அசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செலுத்திய பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மனு அளித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...