பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு


பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் துணைத் தலைவர் நந்தகுமார் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அமைப்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய பொதுவான தேர்வு முறையை கொண்டுவர பரிந்துரை செய்தது. அவ்வாறு செய்தால், தமிழக நீதிபதிகள் வடநாட்டிற்கும், அங்கிருக்கும் நீதிபதிகள் தமிழகத்திற்கும் வர வாய்ப்புள்ளது.

அவ்வாறு நிகழ்ந்தால், சாட்சிகளை விசாரணை செய்யும் போது மொழி அடிப்படையாக பல்வேறு இடர்பாடுகள் எழக்கூடும். எனவே அப்பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் பல்வேறு விதமான சேவைகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஒரு வருட காலத்திற்குள் வாங்காத நேரத்தில் அவற்றை குற்றவியல் நீதிமன்றம் மூலமாகவே பெற முடியும். ஆனால், தற்போது அந்த அதிகாரத்தை வட்டாட்சியரிடம் கொடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

எங்கள் கோரிக்கைகளை வரும் 31-ம் தேதிக்குள் ஏற்காதபட்சத்தில் அமைப்பின் மூலம் குழுவினைக் கூட்டி, கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும். 

இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...