17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். வங்கிகள் இணைப்பு முயற்சியை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பாக அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வங்கிகளில் 95 சதவிகித வங்கி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 2000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏறபட்டு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...