அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் மட்டும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோவையில் பேட்டியளித்தார்.

கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக இரு அணிகளும் இணையுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு நல்லது ஏதும் ஏற்படப்போவதில்லை. அந்த அணியினருக்கு மட்டுமே நல்லது.
மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மேலும், தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக இரு அணிகளும் இணையுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு நல்லது ஏதும் ஏற்படப்போவதில்லை. அந்த அணியினருக்கு மட்டுமே நல்லது.
மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மேலும், தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.