சின்னாம்பதி அரசு பழங்குடியினர் பள்ளியில் இடைநிலை ஆசிரியை பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களின் கல்வி நலனுக்காக, சின்னாம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியை காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இது ஒப்பந்த முறையில் முற்றிலும் தற்காலிகமான தொகுப்பூதியத்தில் நிரப்புதல் ஆகும். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் 2017 ஆகஸ்ட் 24ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வு வரும் ஆகஸ்ட் 31ம் தேதியன்று சென்னை பழங்குடியினர் நல இயக்குநர் குறிப்பிடும் இடத்தில் நடத்தப்படும். 

எனவே, இதற்கு சரியான தகுதியை பெற்றுள்ள பழங்குடியினர் நல இனத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், இத்துடன் இரண்டு புகைப்படங்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், இதில் விண்ணப்பித்து தகுதித் தேர்விற்கு வருவோர் டி.டீ.அடி சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் பட்டய சான்றிதழ், இதர பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்று, வேலை வாய்ப்பக பதிவு அட்டை உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...