கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு

கேரள அரசு கட்டிவரும் தடுப்பணைகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் நீராதாரங்கள் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதிகளில் ஏற்கனவே தடுப்பணை கட்டியுள்ளது.

மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு ஆற்றுநீரை எடுத்துக் கொள்வதற்கு பம்ப்ஹவுஸ் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் கேரள அரசு பாடவயல், சீரக்கடவு, சாடிவயல் சாளையூர் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கையினை துவங்கியுள்ளது.

கோவை மற்றும் கொங்கு மண்டல மக்கள் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு போராட்ட வடிவில் செய்திகள் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் இத்தகைய முறையினை தடுக்க தமிழக அரசு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் மூலமும், தமிழக அரசு இத்தகைய கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று தடையாணை பெற வேண்டும். தொடர்ந்து, பவானி ஆற்றுப்படுகையில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டிவிட்டால் கொங்கு மண்டலம் கடுமையான நீர் அற்ற மக்கள் வாழும் பகுதியாக மாறும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிவை நோக்கி சென்றுவிடும். கடுமையான வறட்சி குடிநீர் கட்டுப்பாடு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில் இதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வர வேண்டும்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட இடங்களில் கள ஆய்வு செய்து உண்மைத் தன்மையினை தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவுபடுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...