கோவையில் பலே கார் திருடன் கைது : 23 கார்களை பறிமுதல் செய்தது போலீஸ்

கோவை மாநகர் பகுதியில் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் ஈடுபட்ட வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாநகரில் சாலையோரம் நிறுத்தப்படும் கார்கள் திருடுபோவதும், வீடு புகுந்து திருடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ஒரு மர்ம நபர் கத்தி முனையில் வழிப்பறி செய்ததாக வடவள்ளி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நேற்று மாலை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிவா என்கிற சிவச்சந்திரன் என்ற நபர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை வடவள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கோவையின் பல்வேறு பகுதிகளில் வீடுபுகுந்து திருடுவதும், சாலையோரம் நிற்கும் கார்களை திருடி போலி ஆவணங்கள் தயாரித்து சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

மேலும், இவர் மீது பல்வேறு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.



தொடர்ந்து, சிவா-வை போலீசார் விசாரணை செய்ததில், 23 கார்கள் திருடியிருப்பதும், பூட்டிய வீடுகளுள் புகுந்து 21 சவரன் நகைகளை கொள்ளையடித்திருப்பதும் தெரியவந்தது.



இந்த நிலையில் சிவா-விடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கார்களை போலீசார் மீட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட கொள்ளையனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...