'இந்தியாவை அடித்துக் கொல்லாதே!' எஸ்.டி.பி.ஐ கட்சியின் மக்கள் பிரச்சார இயக்க பேரணி

இந்தியாவை அடித்துக் கொல்லாதே என்ற கோஷத்தை முன்வைத்து நாடு முழுவதும் 2017, ஆகஸ்ட் 1 முதல் 25 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மக்கள் பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சாரமானது நோட்டீஸ் வழங்குதல், தெருமுனைப் பிரச்சாரம், ஆன்லைன் பெட்டிஷன், சுவர் விளம்பரம், போஸ்டர், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து போத்தனூர் சாலை வரை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மாபெரும் பிரச்சார இயக்கப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ரபீக் அகமத் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மண்டல தலைவர் முஸ்தபா தலைமை வகித்தார். கோவை தெற்கு மாவட்ட தலைவர் அன்சர் ஷெரிப் மற்றும் மதிய மாவட்ட தலைவர் அப்துல் காதர், மேற்கு மாவட்ட தலைவர் சையது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இபெரனியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.  



இப்பேரணியின் இறுதியில், எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலத் துணைத் தலைவர் ரபீக் அகமத் பேசுகையில்; இந்தியா ஒரு குடியரசு என்பதில் இருந்து அடித்து கொல்லும் தேசமாக மாறிவருகிறது. பசு பாதுகாவலர்கள் என்று தங்களை அழைத்து கொள்பவர்கள் அடித்துக் கொல்லுதல் என்பதை உருவாக்கி "பசுவினால் பசுக்காக" என்று முஸ்லீம்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினரை தாக்கி படுகொலை செய்து வருகிறார்கள். மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் துணையோடு, இந்த பசு பயங்கரவாதிகள் பல அப்பாவிகளைக் கொன்று, நூற்றுக்கணக்கான குடும்பங்களை அளித்து விட்டார்கள்.



மாட்டிறைச்சி என்பது பெரும்பாலான இந்தியர்களின் சாதாரண உணவாகும். அது மலிவான ஊட்டச்சத்தை கொடுக்கும் உணவாகும். பல்வேறு மாநிலங்களில் உயர்ஜாதி இந்துக்கள் கூட மாட்டிறைச்சியை சாப்பிடுகிறார்கள். 



இந்த நிலையில் புனிதமான பசு என்ற போர்வையில் கொடூரச் செயலை செய்து கொண்டிருகிறார்கள். அதற்காக முஸ்லிம்களையும், தலித்களையும் குறிவைத்து அடுத்துக் கொல்வதன் மூலம் அவர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும். இந்த தீவிர வெறியர்களின் பிடியில் இருந்து அப்பாவி மக்களையும், தேசத்தையும் பாதுகாக்க, அமைதியை விரும்பும் இந்தியர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றார். 



Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...