ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது- புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் அந்துள்ள தனது இல்லத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது. எந்தவொரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை கமிஷன்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தது இல்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு எடுத்ததே தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தொல்லைகளை தாங்கமுடியாமல் தான் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்கிறது. நீட் தேர்வில் விலக்கு அளித்தால் பயன் பெறுபவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

கல்வித் திட்டங்களை மாற்றாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவை எதிர்மனுதாரராக சேர்த்திருப்பது தவறானது. அவரை தலித் மாணவி என முன்னிறுத்தி இருப்பது தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...