முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் அந்துள்ள தனது இல்லத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது. எந்தவொரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை கமிஷன்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தது இல்லை.
நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு எடுத்ததே தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தொல்லைகளை தாங்கமுடியாமல் தான் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்கிறது. நீட் தேர்வில் விலக்கு அளித்தால் பயன் பெறுபவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
கல்வித் திட்டங்களை மாற்றாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவை எதிர்மனுதாரராக சேர்த்திருப்பது தவறானது. அவரை தலித் மாணவி என முன்னிறுத்தி இருப்பது தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூரில் அந்துள்ள தனது இல்லத்தில் இன்று டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் உண்மையை கொண்டு வராது. எந்தவொரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான விசாரணை கமிஷன்களும், உண்மையை வெளிக்கொண்டு வந்தது இல்லை.
நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு எடுத்ததே தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். எதிர்க் கட்சிகளின் நெருக்கடி மற்றும் தொல்லைகளை தாங்கமுடியாமல் தான் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சிக்கிறது. நீட் தேர்வில் விலக்கு அளித்தால் பயன் பெறுபவர்கள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
கல்வித் திட்டங்களை மாற்றாமல் மாணவர்களின் கல்வித்தரத்தை குறைக்கும் வகையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதாவை எதிர்மனுதாரராக சேர்த்திருப்பது தவறானது. அவரை தலித் மாணவி என முன்னிறுத்தி இருப்பது தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.