ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த தடியடி தொடர்பான விசாரணை முடிவடைய 7 மாதங்கள் ஆகும் - ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்



தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது.

இந்த சட்டம் கொண்டு வந்தும் மாணவர்கள் போராட்டம் நீடித்தது. தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி காலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய மாணவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

சென்னை, மதுரை, அலங்காநல்லூர், கோவை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மாணவர்கள் மீது நடத்தியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தடியடி சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) கோவைக்கு வந்த விசாரணை கமிஷன் தலைவர் ராஜேஸ்வரன் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

சென்னை மெரினா கடற்கரை, சேலம், மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொதுமக்களை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்தது. 

கடந்த ஜனவரி 1-ம் தேதி மூன்று மாத காலக்கெடுவுக்குள் விசாரணை முடிக்க ஆணை கிடைத்தது. ஆனால், விசாரணை கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி தான் தொடங்கியது. இதனால் விசாரணை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

கலவரம் தொடர்பாக 1949 பேர் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவையில் 51 பேரிடம் விசாரணை நடைபெற உள்ளது. 

இந்த 51 பேரில் 29 பேர் போலீசாருக்கு ஆதரவாக பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 15 பேர் போலீசாருக்கு எதிராகவும், 7 போலீசாரும் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்களில் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விசாரணை முடித்த பின்னர் மீண்டும் அடுத்த கட்டமாக மீதமுள்ள 31 பேரிடம் விசாரணை நடைபெறும். 

சென்னையில் ஆட்டோக்கள் மற்றும் குடிசைகள் கொளுத்தப்பட்ட புகாரில் பலர் போலீசாருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்படும்.



விசாரணை கமிஷன் எந்த அதிகாரிகளை அழைத்தாலும் அவர் உடனடியாக வர வேண்டும். இந்த விசாரணை முழுவதுமாக  முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...