தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 71-வது சுதந்திர தின விழா அனுசரிப்பு

தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மூவர்ணக்கொடியேற்றி வைத்து ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.



விழாவில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சுதந்திரம் பெற தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹிரி சுதந்திர தின செய்தியை வாசித்தார். மேலும், அவர் பேசுகையில், வரும் ஆகஸ்ட் 19 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது நுழைவுவாயில் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நடை மேம்பாலம், சேலம் ரயில்நிலைய மேலாளர் அலுவலக அறை மற்றும் முக்கிய பிரமுகர்கள் அறை மற்றும் சாமல்பட்டி ரயில்நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் போன்றவற்றை காணொலிக்காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்தார்.



சேலம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மையை மேம்படுத்தும் பொருட்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 31 வரை தூய்மை இருவார விழிப்புணர்வு மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாகவும், அத்தருணத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தூய்மை மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

கோவை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளை அதிக கட்டணம் செலுத்துவதில் இருந்து காக்க துவக்கப்பட்ட செயலி அடிப்படையிலான வாடகைக்கார் முன்பதிவு செய்யும் வசதி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாகவும், இந்த வசதி சேலம் கோட்டத்தின் இதர ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்றும் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையின் மோப்பநாய்ப்படை சாகசம், சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே பள்ளிகளின் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. விழாவில், சேலம் கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் சந்திரபால், கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் பொன்ராஜ் மற்றும் இதர கோட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.


Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...