மாவோயிஸ்ட்டுகளுக்கு பென்டிரைவ் கொடுக்க முயன்றதாக கூறப்படும் வழக்கில் பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மத்திய சிறையில் உள்ள மாவோயிஸ்ட்டுகளுக்கு பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்பரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கடந்த ஜூன் மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் அனூப் மற்றும் சைனா ஆகியோரிடம், ஆடையில் மறைத்துச் சென்று பென் டிரைவ் கொடுக்க முயன்றதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீது மற்றும் ஹரிஹர சர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பென் டிரைவ் கொடுத்து அனுப்பியதாக கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பார்த்திபன் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ளதாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பந்தயசாலை பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உக்கடம் பகுதியில் மக்களுக்கு இடையூறாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்க சென்ற பார்த்திபன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் செயல்படுகின்றனர்' என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...