நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மூன்று ஆண்டுகள் விலக்கு என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கிறோம்.
90 சதவிகிதம் அதிகமான மாநில பாடத் திட்டம் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிலை எடுத்துள்ளோம். மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உலக அளவு தகுதி நிறைந்தவர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மூன்று ஆண்டுகள் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மூன்று ஆண்டுகள் விலக்கு கேட்பதில் அர்தமில்லை.
நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக கருதுகிறேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, நகைச்சுவை போல காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி பேசுகின்றனர். இது அரசியல் சித்து விளையாட்டு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை கொடிசியா பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு மட்டும் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்கிறோம்.
90 சதவிகிதம் அதிகமான மாநில பாடத் திட்டம் மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நிலை எடுத்துள்ளோம். மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உலக அளவு தகுதி நிறைந்தவர்களாக மாற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மூன்று ஆண்டுகள் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மூன்று ஆண்டுகள் விலக்கு கேட்பதில் அர்தமில்லை.
நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் அரசியல் கட்சிகள், நிரந்தரமாக தமிழக மாணவர்கள் அழிய வேண்டும் என நினைப்பதாக கருதுகிறேன் என்றார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியுள்ளது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, நகைச்சுவை போல காங்கிரஸ் கட்சியினர் மாறி மாறி பேசுகின்றனர். இது அரசியல் சித்து விளையாட்டு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.