கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில் சேவைகள் 11.08.2017 மற்றும் 12.08.2017 ஆகிய தேதிகளில் சோதனை ஓட்டம் இயக்க, சேலம் பிரிவு, தெற்கு ரயில்வே பொறியியல் மற்றும் எலெக்ட்ரிக்கல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கோயம்புத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை இடையே 2 பெட்டிகள் மற்றும் ஒரு ஜென்ரேட்டார் பெட்டி கொண்டு கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக, 80கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. அப்போது பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது எந்த முக்கிய பிரச்சினையும் ஏற்படவில்லை என பொறியாளர்கள் தெரிவித்தனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது பொறியாளர்கள் எம் பிரபாகரன், நல்லமுத்து,மாணிக்கம், மாரியப்பன், மற்றும் எம் பூபதிராஜா ஆகியோர் இருந்தனர். 

இது குறித்து டிஆர்எம் சேலம், தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மா கூறுகையில், கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்களுக்கான ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. மேலும், டபுள் டக்கர் ரயில் மற்ற எட்டு பெட்டிகள் மற்றும் 2 ஜென்ரேட்டார் பெட்டிகள் தலைமையகத்தில் இருந்து விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றார். அனைத்து பெட்டிகளும் வந்த பின்னர் 100 கிமீ வேகத்தில் பொறியாளர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் உதவி மூலம் இயக்கப்படும் என்றார். அதன் பின் விரைவில் கோயம்புத்தூர்- பெங்களூர் இடையே டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...