கட்சியில் நடப்பது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே தொடர்ந்து ஆட்சி 4 வருடம் நீடிக்கும் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

உலக யானைகள் தினம் முன்னிட்டு இன்று கோவை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானை- மனித மோதலை தடுக்க களிறு திட்டம் என்ற பெயரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது எனவும் தெரிவித்தவர், இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவிற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும், யானைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இருந்து கும்கி யானைகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்கு காட்டு யானைகளை கட்டுப்படுத்த அனுப்பபட்டுள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், தண்ணீர் இல்லாமல் ஊருக்குள் புகும் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அகழிகள் ஏற்படுத்தவும், வனப்பகுதிக்குள் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழி நடத்தி செல்வதாகவும், பொறுத்து இருந்து பார்க்கவும் என்றவர் தற்போது, நடைபெறுவது அண்ணன் தம்பி சண்டை மட்டுமே எனவும் ஆட்சி தொடர்ந்து 4 வருடம் நீடிக்கும் என தெரிவித்தார். 

ஓ.பி.எஸ் துணை முதல்வர் என்பது ஊடகங்களில் வரக்கூடிய செய்தி எனவும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பதே சரியானது என தெரிவித்தார். டி.டி.வி.தினகரனை 420 என்பது வாய் தவறி சொல்லி இருக்கலாம் என்றவர் 420 என சொல்லியதற்கு சில விளக்கங்கள் அவர் சொல்லி இருப்பதாகவும் கூறிய சீனிவாசன், இதை டேக்-இட்-இஸியாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி டி.டி.வி. தினகரனை 420 என்று சொன்னதே தனக்கு தெரியாது எனவும் முதல்வர் சொல்லி இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். யாரைப் பற்றியும் தரக்குறைவாக பேசினால் அது தவறு என்றவர் இதை அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார். 

பொருளாளர் நியமனம் குறித்து ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். தவறாக பேசுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும், முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசியல் பிரச்சினைகளை பேசி தீர்க்க நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உதகையில் நடைபெற உள்ளதை அடுத்து அது குறித்து ஆலோசிக்க இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்களுடன் தானும் பங்கேற்க இருப்பதாகவும் இதில் நூற்றாண்டு விழா குறிந்து ஆலோசிக்க இருப்பதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...