நீலகிரியில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் பேசுவதாக மினி லாரி ஓட்டுநர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மினி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில் காவல் துறையினரைக் கண்டித்து கோத்தகிரியில் இருந்து குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை வாகன பேரணியாக வந்து கோரிக்கை மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மினி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வருவதாகக் கூறி 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகன ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்டு எவ்வித விளக்கமும் சொல்லாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள் என அழைக்கழிக்கின்றனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்தனர்.

முன்னதாக, இந்த வாகன பேரணியால் குன்னூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூர் காவல்துறை துணை கண்கணிப்பாளர் முத்தமிழ்.அ. தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறை துணை கண்கணிப்பாளர் கூறுகையில், இந்த விதிமுறைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி செயல்படுத்தி வருகிறோம். இவர்களின் கோரிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளிரம்பாவிற்கு பரிந்துரை செய்கிறோம் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...