சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே நோக்கம்- கோவை மத்திய சிறை ஆய்வுக்கு பின் சைலேந்திரபாபு பேட்டி

சிறை சாலைகளை கல்வி சாலைகளாக மாற்றுவதே தமிழக அரசு மற்றும் காவல்துறையின் நோக்கம் என கோவை மத்திய சிறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது சிறைத் துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

கோவை மத்திய சிறை 1872 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமை மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த சிறையில் தற்போது 1720 கைதிகள் உள்ளனர். பெண்களுக்கு தனியாக சிறை உள்ளது. கோவை மத்திய சிறை வளாகத்தில் பல ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ளன. மேலும், புதிதாக 10 ஆயிரம் மரங்கள் நட முடிவுசெய்யப்பட்டு தற்போது 2 ஆயிரம் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களுக்கு சிறைவாசிகளே தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

மேலும், சிறைக் கைதிகள் மற்றும் இங்கு வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வழங்கப்பட்டு வருகிறது. சிறைக்கைதிகளுக்கென டெக்ஸ்டைல் மில்லும் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் அணியும் காக்கி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் பல்கலைக் கழகம் மூலம் கல்வி மேற்கொண்டு வருகின்றனர். இன்று கோவை மத்திய சிறையில் உள்ள 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. சிறைச்சாலையை கல்விச் சாலையாக மாற்றுவதே எங்களது நோக்கம். மேலும், சிறையில் உள்ளவர்களுக்கு பல்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...