மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி மாடுகளுக்கும் ஆதார்! கோவையில் துவக்கம்


கோவையில் முதல் முறையாக மனிதர்களுக்கு ஆதார் எண் போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 3 வண்ணங்களில் 3 வகையான ஒரு லட்சம் மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மனிதர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுவது போல மாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முதல் முறையாக கோவை மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடைகளின் விபரங்களை சேகரித்து அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், இதனை கால்நடைகளுக்கான மருத்துவ அட்டையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு 12 இலக்க எண் மற்றும் மாட்டின் இனம், வயது, உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடையாள அட்டையில் இடம் பெறுகின்றன. கோவை மாவட்டத்தில் கால்நடை மருந்தகம், மருத்துவமனை உள்ளிட்ட 105 மையங்களில் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கலப்பின மாடு, நாட்டின மாடு, எருமை ஆகியவற்றிற்கு 3 வண்ணங்களில் 3 வகையான அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோவை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராமசந்திரன் கூறும்போது, கோவை மாவட்டத்தில் ஒரு வருட காலத்திற்குள் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் விரைவில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த அட்டை மாடுகளை கண்காணித்தல், மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல், மருத்துவ காப்பீட்டிற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றிக்கு உதவும் என தெரிவித்தார்.

விவசாயி கோவிந்தன் கூறும்போது, மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை குறித்து மருத்துவர்கள் கண்காணிக்கவும், மருத்துவ வசதிகள் வழங்கவும் இந்த அட்டை பயன்படும். இது வரவேற்கத்தக்கது என்றார்.

மாடுகளை இறைச்சிக்காக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு கொண்டு வந்த விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாடுகளை கண்காணிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...