ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியன்று ரயில் நிலையத்தில் இருந்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரயில்வே காவல்துறையின் சார்பில் பாராட்டும், வெகுமதியும் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 12695) சரோஜா எனும் பயணி கடந்த ஜூலை 9ம் தேதியன்று பயணித்துள்ளார். அப்போது, அந்த ரயிலில் 12 பவுன் நகை, பான், ஏடிஎம், ஆதார் அட்டை, கைபேசி உள்ளிட்டவற்றை சரோஜா தவரவிட்டுள்ளார்.

இதனிடையே, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி செந்தில் குமார் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் ஓடியுள்ளார். இதனைத்தொடர்ந்து, காவலர் செந்தில் குமார் அவரை துரத்திச் சென்ற நிலையில் ரயில் நிலையத்தின் முன்பு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகியோர் அந்த நபரை வழிமறித்து பிடித்து காவல்துறை அதிகாரியிடம் ஒப்பத்தனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த வாலிபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்பதும், ஐடி படிப்பு முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு உள்ளது என்னும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ரயில்வே ஐஜி பொன்மாணிக்கம் ஆணையின் பெயரில் ரயில் நிலையத்தில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்களை கவுரவிக்கும் விதமாக ஜின்னா, நவாஸ், மனோகரன், செல்வம் மற்றும் பாபு ஆகிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 500 ரூபாயினை ரயில்வேத் துறை டிஎஸ்பி குணசேகரன் வழங்கினார். மேலும், காவலர் செந்தில்குமாருக்கு 3 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முன்னதாக, ரயிலில் நகை மற்றும் கைபேசியை தவறவிட்ட சரோஜா ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, பொருட்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...