முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சியைக் கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். அவ்வப்போது சாலை மறியல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் இன்று மாலை உழவர் சந்தை அருகே, முறையாக குடிநீர் வழங்காத கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.



தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, சிங்காநல்லூர், குறிச்சி, பீளமேடு, சரவணம்பட்டி மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி போன்ற பகுதிகளில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை. 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டு கோவை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு குடிநீர் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை.

20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவையில், மக்களின் எதிர்காலத்தேவைகளை கருத்தில் கொண்டு குடிநீர் திட்டங்கள் கொண்டுவராமலிருக்கிறது ஆளும் அரசு. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...