கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் இன்று வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.
உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.
உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.