கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 337 அங்கன்வாடி பணியாளர்கள், 200 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 586 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானர்வர்கள்.
அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் மற்றும் மைய வாரியான இன ஒதுக்கீடு விபரம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் அகஸ்ட் 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 337 அங்கன்வாடி பணியாளர்கள், 200 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 586 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானர்வர்கள்.
அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் மற்றும் மைய வாரியான இன ஒதுக்கீடு விபரம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் அகஸ்ட் 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.