அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 18 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 337 அங்கன்வாடி பணியாளர்கள், 200 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 586 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானர்வர்கள்.

அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் மற்றும் மைய வாரியான இன ஒதுக்கீடு விபரம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் அகஸ்ட் 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...