கோவை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் பெண்கள், வளர் இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் சிறார் இல்லங்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்கு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014)-யின் கீழ் பதிவு செய்து சான்று பெற்றிட ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தது.
அதில் பதிவு செய்யாதவர்களுக்கென வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள், பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம் கோவை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை - 18 என்ற முகவரியில் நேரில் பெற்று வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இதில் பதிவு செய்ய கருத்துரு சமர்ப்பிக்காத அனைத்து விடுதிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் வேளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.