தொண்டாமுத்தூரில் அரசு கலைக் கல்லூரி துவக்கம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைக்கிறார்.



கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் கலைக் கல்லூரி துவங்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வருகின்ற ஞாயிறன்று (ஜூலை 6) புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க விழா நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,

தொண்டாமுத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதியார் பல்கலைகழக உறுப்புக்கல்லூரி) துவக்கப்படவுள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ. (ஆங்கிலம்), பி.காம் (சிஏ), பி.காம் (பிஏ), பி.ஏ.வணிகவியல், பிஎஸ்சி கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வகுப்புகள் உடனடியாக தொடங்கப்படவுள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர், ஆகியோர் வாழ்த்துறை வழங்கவும், அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

எனவே, தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களும், மேலும், இந்த கல்வி ஆண்டிலேயே, தானியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவியர்களும் இப்புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்திகி, உதவி இயக்குநர்கள் கணேஷ்ராம், (பேரூராட்சிகள்), பத்மாவதி, (ஊராட்சிகள்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...