ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு முகநூலில் கருத்து பதிவு செய்த இளைஞர்களை தேசிய புலனாய்வு துறை விசாரணை


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக முகநூல் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவையில் இருக்கும் இளைஞர்கள் கருத்து பதிவு செய்தது தொடர்பாக கோவை, கரும்புக்கடை மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரிடம் தேசிய புலனாய்வு துறையினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று மாலை விசாரணை மேற்கொண்டனர்.



இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்ற அனுமதி பெற்று இன்று கோவையில் கரும்புகடை ஆசாத் நகர் மற்றும் உக்கடம் ஜி.எம் நகர் பகுதிகளில் தீடீர் சோதனை நடத்தினர். தேசிய பாதுகாப்பு முகமை பிரிவில் உள்ள ஏ.டி.எஸ்.பி  செளகத் அலி என்பவர் தலைமையில் 13 அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டது.



கோவை கரும்புகடை பகுதியில் உள்ள ஆசாத் நகர் பகுதியில் முகமது அப்துல்லா என்ற இளைஞரிடமும், உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்ற இளைஞரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாலை 5 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. வீடு, கடை என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இரு இடங்களில் இருந்தும் இரண்டு லேப்டாப்கள், 77 டிவிடிகள், 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. 

அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அப்துல் ரகுமான் மற்றும் முகமது அப்துல்லா ஆகிய இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்தனர். இருவரும் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள்  இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன், டிவிடி போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...