சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகள் உபயோகிப்பது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு குறைவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு தவிர்ப்பது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக உள்ள பைகளை பயன்படுத்துவது குறித்த கலந்தாலோசனை மற்றும் உபவிதிகள் உருவாக்குவதற்கான கூட்டம் கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் குப்பைகள் 100 சதவிகிதம் தரம் பிரித்து கையாள்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சண்முகம், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (பொ) கே.சரவணக்குமார், உதவி ஆணையர், மாநகராட்சி அலுவலர்கள், உணவக சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...