கோவை மாநகராட்சியில் 80 சதவிகித சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை - எம்.எல்.ஏ. நா.கார்த்திக் பேட்டி

கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 

இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.



தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.



கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...