கோவை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர்.
இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
இந்நிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அரசு மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மற்றும் மருத்துவர்களிடம் அலோசனை நடத்தினர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. பக்கத்து மாநிலத்திலிருந்து அதிகளவிலான டெங்கு பரவ வாய்ப்புள்ளது. பொள்ளாச்சியையொட்டியுள்ள கிராம பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால், தனியார் மருத்துவமனைகளையும், தொண்டு நிறுவனங்களையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை குப்பைகள் அகற்றப்படாமலும், சாக்கடை கழிவுகள் தூர்வாரப்படாத நிலையே உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்ளாட்சி பகுதிகளில் 100-க்கு 80 சதவிகித சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
போர்க்கால அடிப்படையில் உள்ளாட்சித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.