இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. சசிகுமாரின்  இறுதி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்பட்டது. 

தொடர்ந்து இந்த கொலை வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இவ்வழக்கு குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. 

சசிகுமார் கொலை வழக்கில் தொடர்புடையதாக முபாரக், சதாம் ஆகிய இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளிட்டனர். மேலும், அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் இன்று மாலை சாய்பாபா காலனி பகுதியில் பதுங்கியிருந்த சதாம்-ஐ போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேடப்படும் மற்றொரு நபர்



Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...