பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

கோவையில் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...