கோவையில் விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஈடுபட்டனர். அப்போது விவசாய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர் கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனங்களிடம் இது ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.