தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல இயக்கதில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தில் நகர நல மருத்துவ அலுவலர் கே. சந்தோஷ்குமார் டெங்கு காய்ச்சல் பற்றியும், கொசுக்களால் வியாதி பரவுதலைப்பற்றியும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

கோவை மாநகர சுகாதார அலுவலர் கே.வி. திருமால் மற்றும் சுகாதார ஆய்வாளர் கே.ராதாகிருஷ்ணன் டெங்கு உற்பத்தியாகும் இடங்கள் பற்றியும், கொசு உற்பத்தி மையங்களை தடுப்பது பற்றியும் செயல்முறை காட்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

மேலும், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பற்றிய அறிவுரைகளை வழங்கி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்கள்.  

டெங்கு விழிப்புணர்வு கூட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் மற்றும் சுகாதார அலுவலர் மருதாசலம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...