கே.எம்.சி.எச் மருத்துவமனையில் "கர்ப்பப்பை புற்றுநோய் பற்றிய தொடர் மருத்துவ கல்வி"

மாத விடாய் காலத்தில் அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படுவதை பெண்களும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர்களும் எதிர் கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னைகளாகும். மாத விடாயின் போது அதிகமான ரத்தம் வெளியேறுவதற்கு ஹார்மோன்  கோளாறுகள் போல பல காரணங்கள் உண்டு மேலோட்டமாக காணும் போது, இதனால் எந்த பிரச்சனை இல்லை என்று தோன்றினாலும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது மார்பக புற்றுநோய் போல சாதாரணமானவையாக இல்லாத போதும் கருவறை புற்றுநோய் இந்திய பெண்களிடையே மெல்ல அதிகரித்து வருகிறது. சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய, இது போன்ற நோய்களை நிர்வகிப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து, மகளிர் நோயியல் மருத்துவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். 

கர்ப்பப்பை புற்றுநோய்  பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு என்னென்ன சிகிச்சை முறை விருப்பங்கள் உள்ளன என்பதை கற்றுக்கொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் கே.எம்.சி.எச் மருத்துவமனை ஜூலை 25 தேதியன்று மகளிர் நோயியல் மருத்துவர்களுக்காக ஒரு தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை நடத்தியது. "கர்ப்பப்பை புற்றுநோய் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை" கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில், விருப்பத்திற்கேற்ப சிகிச்சை முறைகளை நோயாளிகளுக்கு வழங்குவதிலும் மற்றும் மருத்துவர்களை மேலும் கற்றுக்கொள்ள தூண்டுவதற்கு, கலந்து பேசுவதற்கும் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களை தெரிந்து கொள்ளவும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை முன்னணியில் உள்ளது. அறிவு பூர்வமான பரிமாறுதல்களை ஒத்த கருத்துடைய மருத்துவர்கள் பகிர்ந்துகொள்ளவும் பொதுமக்களிடையே மாத விடாய் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு மேடை அமைத்து கொடுப்பதிலும் கே.எம்.சி.எச் மருத்துவமனை  பெருமிதம் கொள்கிறது என்று கூறினார்.

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் புற்றுநோய் நிபுணராக உள்ள டாக்டர். அன்புக்கனி சுப்பையன் கூறுகையில், மாத விடாய் காலங்களில் பெண்களுக்கு அசாதாரணமான ரத்தப்போக்கு ஏற்படுகிறதா, என்பதை மகளிர் நோய் மருத்துவர்கள் ஒரு சந்தேக அளவுகோலோடு  கண்டறிய வேண்டியது, தேவை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு ஏற்படும், அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சி கூறும் செய்தியாகும். கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயை நிர்வகிப்பதில் தற்போது உள்ள நடைமுறைகள் பற்றியும் மற்றும் இவ்வகையான நோய்களை கையாளும் புற்றுநோய் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் நன்றாக விளக்கி கூறினார்.



இந்நிகழ்ச்சியில், பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஜனீஷ் குமார் குப்தா, உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான மகளிர் நோய் மருத்துவர்களும் பங்கு கொண்டனர். பேருரைகள், விவாதங்கள் மூலமாக மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை விருப்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. கோவை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் சுமார் 125க்கும் மேற்பட்ட மகளிர் நோயியல் மருத்துவர்கள், பயிற்சி பெறுவோர் மற்றும் முதுகலை பயிலும் மருத்துவ மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...