மின்சாரக் கருவியின் உள்ளே நூதனமுறையில் எடுத்து வரப்பட்ட தங்கத்தினை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் குவைத்தில் இருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமான பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டிருந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அப்துல் கபூரை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த மின்சாரக் கருவியில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ அளவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தினை கடத்தி வந்த அப்துல் கபூரை கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் குவைத்தில் இருந்து ஷார்ஜா வழியாக ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அப்போது விமான பயணிகளிடம் பரிசோதனை மேற்கொண்டிருந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அப்துல் கபூரை சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் கொண்டு வந்த மின்சாரக் கருவியில் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ அளவிலான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தங்கத்தினை கடத்தி வந்த அப்துல் கபூரை கைது செய்தனர்.