உதகை பகுதியை சேர்ந்த ரேவதி (45) கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுக்கரை அருகே, அரிசிபாளையம் பகுதியில் உள்ள மேற்கு தோட்டம் பகுதியில் குடியேறி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ரேவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முதற்கட்டமாக ரேவதியின் மகன் என்று கூறி சந்தோஷ் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் ரேவதியின் தலையில் கணமான பொருள் கொண்டு தாக்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிந்துள்ள கைரேகைகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேவதியின் கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மதுக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.