விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை மீது நடவடிக்கை கோரி விவசாயிகள் சங்கம் ஆட்சியரிடம் மனு

விளாங்குறிச்சி பகுதியில் அனுமதியற்ற குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகராட்சி 32-வது வார்டு, விளாங்குறிச்சி கிராமத்தில் கனிஷ்கா வாட்டர்ஸ் என்ற பெயரில் சதீஸ் என்பவரால் நாள் ஒன்றுக்கு தற்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிப்பதாக தெரிய வருகிறது. இந்நிறுவனம் தண்ணீர் விநியோகம் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள TN 38 BR 5913 லாரியினை பயன்படுத்தியும், மேலும், பல்வேறு லாரிகளின் மலம் தண்ணீர் விற்பனை செய்து வருவதும், உரிய உரிமம் இல்லை என்பதும் தெரியவருகிறது.

வர்த்தக ரீதியாக தண்ணீர் உறிஞ்சி விற்பதால் அருகில் உள்ள விவசாயிகளின் கிணறுகள் வற்றி விடுவதாலும் குடிநீர் பயன்பாட்டில் உள்ள பொதுக் கிணறுகளும் வற்றி விட்டன. 

எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...