அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கோவையில் செயல்படும் காதுகேளாதோர் பள்ளிக்கு மாற்றம்



திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களை கோவையில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் சேர்க்குமாறு கோவை மாவட்ட​ ​ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கோதபாளையத்தில் திருப்பூர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளர் முருகசாமி என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பள்ளியில் பயிலும் சுமார் 110-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது. இந்நிலையில் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அப்பள்ளியில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மற்றும் இன்பண்ட் ஜீசஸ் பள்ளியில் சேர்க்க கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழ்களை பெற்று உடனடியாக புதிய பள்ளிகளில் மாணவர்களை சேர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...