டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவையில் மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்களுடன் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு மாநகராட்சி 5 மண்டல வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (21.07.2017) மாநகராட்சி ஐந்து மண்டல உதவி ஆணையர் தலைமையில், மண்டல சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுடன் மண்டல வாரியாக டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமும், அரசு  வெளியிட்டுள்ள டெங்கு விழிப்புணர்வு குறும்படம் மூலமும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகர நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் விளக்கிக் கூறினார். மேலும், இதனை நலச்சங்கங்கள் மூலம், குடியிருப்பவர்களுக்கும் எடுத்துரைக்க வழியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ச்சியாக இது போன்று பல்வேறு டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக டெங்கு தடுப்பு பணிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாறும், மேலும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், சுயமாக மாத்திரை மருந்துகள் உட்கொள்ள வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...