கோவையில் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவையில் உள்ள 'பைக் பார்க்கிங்'-களில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு, நீண்டகாலமாக உரிமை கோராமல் நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

அதன்படி, பீளமேடு போலீசார் இன்று ஃபன்மால் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அங்கு 17 இருசக்கர வாகனங்கள் நீண்டகாலமாக கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்கில் இருந்து 4 வாகனங்களை சாய்பாபாகாலனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு, அவை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...