தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சமூக வீரோதிகள் கலந்துள்ளனர்- தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்திருப்பதாகவும், எனவே தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தில் நடைபெறும் மறைந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் இன்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னாள் என்ன சேவை செய்தார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அரசியலில் மக்கள் சேவை செய்யும் தலைவர்கள் ஏற்கனவே உள்ளார்கள். பல வருடங்களாகவே சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்ததாலேயே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் போது தாங்கள் ஆதரவு அளித்தோம். தற்பொழுது இவ்வளவு பேசும் கமல் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு எவ்வளவோ பிரச்சனைகள் இருந்த போது எந்த கருத்தும் கூறாதது ஏன் ?.

திரைப்படத்தை போல் நினைத்துக்கொண்டு ஒரு நாள் முதலமைச்சர் ஆகலாம் என்ற கதை அரசியலில் இல்லை. அரசியல் என்பது ட்விட்டர் தளத்தில் இன்றி மக்களுடன் நிஜ தளத்தில் இருப்பது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டியவையாக உள்ளது. மாணவர்கள் மத்தியில் சில சமூக விரோதிகள் கலந்துள்ளனர். சமூக பாதுகாப்பிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது உண்மை தன்மையை அறியாமல் கருத்து கூறும் பழக்கம் எதிர்க் கட்சிகளிடையே உள்ளது. கர்நாடக சிறைத்துறையில் டி.ஐ.ஜி ரூபா மாற்றப்பட்டது குறித்து தீர விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...