குடியரசு துணைத் தலைவர் போட்டி வரும் ஆக்ஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார்.
வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.
வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்து வரும் வெங்கய்யா நாயுடு-வை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்த வெங்கய்யா நாயுடு கடந்த 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பதவி வகித்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வெங்கய்யா நாயுடு தற்போது குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை வெளியிட்டார்.
வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு சரியானவர் என்றும், நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் செய்தியாளர்களிடம் அமித்ஷா தெரிவித்தார்.
வெங்கய்யா நாயுடுவை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி சார்பில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.