கோவையிலிருந்து கொழும்பு வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து சேவை துவக்கம்


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கோவையிலிருந்து கொழும்பு வரை வாரத்தில் நான்கு நாட்கள் என கோவையில் விமான போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது. இந்தியாவில் 14வது நகரமாகவும், தென்மாநிலங்களில் உள்ள மூன்று நகரங்களில் கோவையிலும் இச்சேவை துவங்கியுள்ளது. இந்த வாரத்தில் விசாகபட்டினத்திலிருந்து ஜூலை 8ம் தேதியிலும், ஹைதரபாத்திலிருந்து ஜூலை 12ல் இருந்தும் துவங்கியுள்ளன. இதனுடன் இந்தியாவில் 14 நகரங்களுக்கு 126 விமானங்களை இயக்குகிறது. இதில் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, புதுதில்லி, கயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு முன்னதாகவே சேவையைக் கொண்டுள்ளது. 



இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சிவா ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் அடுத்த துடிப்பான நகரமாக திகழும் கோவைக்கு எங்களது சேவையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது வீட்டு வாசலிலிருந்து உலகத்தில் பல நாடுகள், நகரங்களுடன் தொடராக செல்ல, எளிய முறை பயணமாக இது அமையும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வலுப்படுதவும், வர்த்தகத்தையும், சுற்றுலா, ஆன்மீக பயணம், உடல் நலம் மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக அமையும். 

இந்த விமான சேவை துவக்கத்துக்குபின், வர்த்தக சமுதாயத்தினரும், இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் கோவையின் ஜவுளி, பொறியியல், வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உற்பத்தி என பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். இந்த விமான பயணம் செய்வோர் விருது பெற்ற இலங்கையின் விருந்தோம்பலை அனுபவிக்க முடியும். ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் புதிய ஏ321நியோ விமானங்கள் தென்னிந்தியாவுடன் இணைகிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.



விமானப் பயண நேரம்:

கொழும்பு - கோவை புறப்படும் நேரம்: 1:30 மதியம் சென்றடையும் நேரம்: 2:35.

கோவை - கொழும்பு புறப்படும் நேரம்: 3:35 மதியம் சென்றடையும் நேரம்: 4:45.

இயங்கும் நாட்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...