டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் கல்லூரி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கொங்கு நர்சிங் கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 நபர்களுடன் மத்திய மண்டலம் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வீடு வீடாக சென்று துப்புரவு பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சிறப்பு டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம் குனியமுத்தூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு நடைபெற்ற சிறப்பு டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர். 

இச்சிறப்பு டெங்கு தடுப்பு பணிகள் மாநகராட்சியின் ஐந்து மண்டல பகுதிகளில் நடைபெற்றது. அவைகளில் மத்திய மண்டலத்தில் சங்கனூர் மற்றும் இரத்தினபுரி இடங்களில் கொங்கு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 100 பேரும், டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4890. தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் இடத்தில் நேரு கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 60 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1643.

கிழக்கு மண்டலத்தில் நேரு நகர் மற்றும் காளப்பட்டி இடங்களில் பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 65 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3015. மேற்கு மண்டலத்தில் கல்வீராம் பாளையம், பொம்மனாம் பாளையம், ஓணாம்பாளையம் இடங்களில் இராமலிங்க சௌடேஸ்வரி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 120 பேரும் டிபிசி பணியாளர்களும் 50 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1320. 

வடக்கு மண்டலத்தில் காந்திமா நகர் இடத்தில் சி.எம்.எஸ். கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 100 பேரும் டிபிசி பணியாளர்களும் 100 பேரும் இணைந்து பார்வையிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 2525. இனி வரும் காலங்களில் மாநகராட்சி ஐந்து மண்டல பகுதிகளில் உள்ள இடங்களில் இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மற்றும் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) டி.ஆர்.ரவி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் (பொ) சரவணன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...