கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 8 ஏரிகள் புனரமைக்கும் பணி குறித்த இடைநிலை அறிக்கை பற்றிய விளக்ககூட்டம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.
எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் புனரமைப்பு பணிக்கான மேற்கொள்ளவேண்டிய செயல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருடம் முழுவதும் ஏரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏரிகளில் வந்து சேரும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தல் அவசியம் குறித்து விவாதிக்கப்ட்டது.
எட்டு ஏரிகளையும் இணைக்கும் வகையில் ஒரு மிதி வண்டிப்பாதை அமைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி முகப்பை அழகுபடுத்தி மேம்பாடு செய்தல், சுற்றுலா தலங்கள் அமைத்து பயன்பாட்டினை மேம்படுத்துதல், பறவை சரணாலயம் அமைத்தல், மரங்கள் வளர்த்து பசுமைப்படுத்துதல், வளர்ந்த நாடுகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இணையாக கோவை மாநகராட்சியில் உள்ள 8 ஏரிகளை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அருண்பிரகாஷ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார் அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.