பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் "இசைஞர்- 2017" போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தி இந்து தமிழ் நாளிதழ், கோவை நன்னெறிக் கழகம் மற்றும் சரோஜினி நடராஜ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் பதின் பருவத்தினருக்கான இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி!

இசைக்கருவிகளை இசைக்கும் இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்கிற எண்ணத்தில் கோவை நன்னெறிக்கழகம், சரோஜினி நடராஜ் அறக்கட்டளை மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் இணைந்து ‘இசைஞர்- 2017’ எனும் இசைக்கருவிகள் இசைக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு 13 முதல் 19 வயதிற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தகுதிச்சுற்று போட்டிகள் ஜூலை 29-ம் தேதியும் இறுதிப் போட்டி ஜூலை 30-ம் தேதி அன்றும் கோவை சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவரவர் இசைக்கருவிகளை கையோடு எடுத்து வரவேண்டும். உணவு மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றுடன் இசைக்க விரும்பும் கருவியின் பெயரையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://bit.ly/hindu-instrumental-contest தி இந்து அலுவலகத்தில் (19&20 ஏ.டி.டி காலனி, எல்.ஐ.சி ரோடு, கோவை-18) நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-07-2017.

வயது சான்று (பள்ளி / கல்லூரி அடையாள அட்டை) போட்டி நடைபெறும் அன்று கொண்டு வரவேண்டும்.

இளம் திறமைகளைக் கண்டறிந்து அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனும் உயரிய நோக்கில் இலாப நோக்கங்கள் இன்றி நடத்தப்படும் நிகழ்ச்சி இது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலும் விபரங்களுக்கு: 9843131323 / 0422 - 2212572.

இதில், காட்ஸ் வில்லா, உடுமலை.காம் மற்றும் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி மற்றும் டிஜிட்டல் பார்ட்னராக சிம்ப்ளிசிட்டி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...